×

சாவிலும் இணைபிரியா தம்பதி இறந்த கணவனை கட்டியணைத்து அழுதபடி உயிரைவிட்ட மனைவி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் நல்லாப்பாளையம் சாலையை சேர்ந்தவர் குப்புசாமி(80). விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குப்புசாமி, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைடுத்து, சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு உடலை எடுத்து வந்து இறுதி சடங்கிற்கு அவரது மகன்கள் ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த கணவனை கட்டி அணைத்து அவரது மனைவி சரஸ்வதி அழுதுள்ளார். அதில் நீண்ட நேரம் ஆகியும் சரஸ்வதி கணவன் உடல்மீது சாய்ந்த நிலையில் இருந்ததால், சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், சரஸ்வதியை எழுப்பினர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மருத்துவமனை சென்று பார்த்தபோது சரஸ்வதியும் உயிரிழந்தது தெரியவந்தது. கணவன் உயிரிழந்த சோகத்தில் அவரை கட்டி அணைத்து அழுதபடி மனைவியும் உயிரிழந்த சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைபிரியா தம்பதிக்கு ஊர்மக்கள் அஞ்சலி செலுத்தி இறுதி சடங்கு செய்தனர்.


Tags : Sawil ,Saibria , In death, the married couple died hugging their dead husband and crying
× RELATED கோவை அருகே பரபரப்பு நீட் பயிற்சி மைய...